search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் தந்தை தற்கொலை"

    பாகூரில் கடன் தொல்லையால் போலீஸ் காரரின் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    உறுவையாறு பாகூர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் கார்த்திகேயன் (வயது 58). தனியார் கம்பெனி ஊழியர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பாலமுருகன் ஐ.ஆர். பி.என். போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

    கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் கடன் இருப்பதால் கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்திகேயன் வீட்டு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார்.

    மகன் பாலமுருகன் வீட்டுக்கு வந்து தந்தையை தேடினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×